33 வேட்பாளர்களும் ஒரே நேரத்தில்... இபிஎஸ் போட்ட பக்கா பிளான்.! - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் அனைவரும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2024 மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 28ஆம் தேதி நடைபெற்று மனுக்கள் திரும்பி பெற மார்ச் 9ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் 39 மக்களவைத் தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் வேட்பு மனு தாக்கல் செய்ய காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை கால அவகாசம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் 33 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK candidates file nominations issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->