அதிரடி நடவடிக்கை! 189 குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை...! -ரேகா குப்தாவுக்கு முதலமைச்சர் கடிதம் - Seithipunal
Seithipunal


டெல்லி மேம்பாட்டு ஆணையம் (DDA),'  3  நாட்களுக்குள் தெற்கு டெல்லியின் கல்காஜி விரிவாக்கத்திலுள்ள பூமிஹீன் முகாமில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களும் தாமாக முன்வந்து காலி செய்ய வேண்டும் என்று அறிவித்திருந்தது.

இதில் கடந்த ஜூன் 8, 9 மற்றும் 10 ஆகிய 3 நாட்களுக்குள் குடியிருப்பாளர்கள் காலி செய்ய வேண்டும் என்றும், தவறினால் குடியிருப்புகளுக்குலுள்ள பொருட்களுக்கு அரசு பொறுப்பேற்காது என்றும், திட்டமிட்டபடி இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, குடியிருப்புவாசிகள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி மதராசி குடியிருப்பு இடிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் 'ரேகா குப்தா' -வுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடிதம்:

அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டதாவது, "189 குடும்பங்களுக்கு நரேலாவில் வீடுகள் ஒதுக்கப்பட்டாலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை" என முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஆதலால் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Action taken 189 families do not have basic facilities Chief Ministers letter to Rekha Gupta


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->