அரவிந்த் கெஜ்ரிவால் கைது! நாடு முழுவதும் போராட அழைக்கும் ஆம் ஆத்மி.!!
AAP invite alliance parties protest for aravind kejriwal arrest
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பிய நிலையில் அவர் ஆஜராகவில்லை.
இதுல எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து விளக்கு அளிக்க முடியாது என கை விரித்தது.
டெல்லி உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு வெளியான உடன் நேற்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்த ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஆம் இந்தியா கூட்டணி கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
AAP invite alliance parties protest for aravind kejriwal arrest