தேர்தல் நெருங்கிய நிலையில்., பாஜகவுக்கு அழைப்பு விடுக்கும் ஆம்ஆத்மீ.!
aam admi caal bjp member
கோவாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர் அவர்களின் கனவை, ஆம் ஆத்மி கட்சி நிறைவேற்றும் என்று, டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "கோவாவின் வளர்ச்சிக்காக மறைந்த முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர்-ன் கனவை தற்போதைய அரசு குழிதோண்டிப் புதைத்துவிட்டது.
மறைந்த முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர் உடன் இணைந்து பணியாற்றிய அனைத்து பாஜக நிர்வாகிகளும் எங்களுடன் இணையுங்கள். நாம் அவரது கனவை நிறைவேற்றிக் காட்டுவோம்.
அவரின் கனவை நிறைவேற்றும் சக்தி எங்களுக்கு உள்ளது. ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சி காங்கிரஸ் மீது மக்களுக்கு கடும் அதிருப்தியில் உள்ளனர். இதற்கான மாற்று ஆம் ஆத்மியை மக்கள் விரும்புகின்றனர்.
கோவாவில் தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும், பாஜகவின் ஆட்சி அமைக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்காக பணம் எங்கிருந்து வருகிறது. பணத்தை நேர்மையாக பயன்படுத்தினால், கோவாவில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி இருக்கலாம்." என்று தெரிவித்துள்ளார்.