புதிய நாடாளுமன்ற திறப்பு விழா! நாடு முழுவதும் 19 காட்சிகள் புறக்கணிப்பு! - Seithipunal
Seithipunal


புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பு விழாவை நாடு முழுவதும் 19 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. 

வருகின்ற மே 28ஆம் தேதி நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியை காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

இது குறித்த அதிகார அறிவிப்பின்படி, காங்கிரஸ், திமுக, மதிமுக, விசிக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடத்துசாரிகள், ஆம் ஆத்மி, உத்தவ் தாக்குரே சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட 19 கட்சிகள் இந்த திறப்பு விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன.

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க கடும் எதிர்ப்பை தெரிவித்து, நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

மேலும், நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் நசுக்கப்படும்போது, புதிய கட்டிடத்திற்கு மதிப்பில்லை என்றும் எதிர்கட்சிகள் அறிக்கை விடுத்துள்ளன. 

நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு முன்பு எம்பிக்கள் இடம் மத்திய அரசு கருத்து கேட்கவில்லை என்றும், குடியரசுத் தலைவர் இல்லாமல் நாடாளுமன்றம் இயங்காது என்ற போதும், அவருக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

19 opposition parties boycott the inauguration new Parliament building 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->