உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் 1 லட்சம் அபேஸ்.. திமுக நிர்வாகிகளுக்கு அல்வா கொடுத்த மர்ம நபர்.!! - Seithipunal
Seithipunal


சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகளுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எம்பி கலாநிதி மாறன் ஆகியோர் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு பரிசு தொகை வழங்கினர். 

நிர்வாகிகளுக்கு பரிசுத்தொகை வழங்குவதாக சேப்பாக்கம் தொகுதி வட்டச் செயலாளர் வெங்கடேசன் ஒரு லட்ச ரூபாய் பாக்கெட்டில் வைத்திருந்தார். கூட்ட நெரிசலில் திடீரென பாக்கெட்டில் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இதையடுத்து, அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது தொப்பி அணிந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெங்கடேசன் அருகிலேயே நீண்ட நேரமாக நின்று நோட்டமிட்டு, உதயநிதி ஸ்டாலின் புறப்படும் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி வெங்கடேசன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.

இதையடுத்து, வெங்கடேசன் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1 kahk stolen on udhayanidhi stalin meeting


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->