ஓடிக்கொண்டிருக்கும் போது ஏன் விரைவாக மூச்சு எடுக்கிறார்கள்?! - Seithipunal
Seithipunal


சிலந்தி வலையினுள் பூச்சிகள் சிக்குப்பட்டு நகர முடியாது போகின்றன. ஆனால் சிலந்திகள் தாம் கட்டிய வலையினுள் எவ்வாறு சிக்குப்படாது ஓடித்திரிகிறது?

🕸சிலந்தி வலையென்பது சிலந்திகளின் வயிற்றில் உள்ள சுரப்பிகளினால் சுரக்கப்படும் ஒரு வகைத் திரவ நூலிழை. வயிற்றின் துவாரத்தில் இருந்து சுரப்பு மெல்லிய நூலிழை போன்று வெளிவரும். இது வெளிப்பட்டதும் இறுகிவிடும். இவற்றில் சில நூலிழைகள் ஒட்டும் தன்மையுடையதாக இருப்பதால் வேறு பூச்சிகளைச் சிக்கவைக்கும் சில மிருதுவாகவோ அல்லது உலர்ந்த நூலிழையாகவோ இருக்கும். எனவே சிலந்தி தான் பின்னிய வலையில் எந்தெந்த நூலிழைகள் ஒட்டக்கூடியவை என்பது தெரிந்து இவற்றில் இருந்து விலகி ஒட்டாத நூலிழைகளின் மீது ஊர்ந்து செல்லும்.

ஓடிக்கொண்டிருக்கும் போது ஏன் விரைவாக மூச்சு எடுக்கிறார்கள்?

ஓடும்போது கூடியளவு சக்தி தேவை. இதற்கு போதியளவு ஆக்சிஜன் தேவை. எனவே, அதிகளவு ஆக்சிஜன் பெறுவதற்காக விரைவான சுவாசத்தை மேற்கொள்கின்றனர்.

அளவுக்கு அதிகமான உப்பு சேர்க்கப்பட்ட உணவை உட்கொண்ட ஒருவருக்கு அதிக தாகம் ஏற்படுவது எதனால்?

உடலினுள் எடுக்கப்பட்ட அதிக உப்பை உடல் வெளியேற்ற வேண்டும். உப்பு நீர்க் கரைசலாகவே வெளியேற வேண்டும். இதனால் உடல் அதிகளவு நீரை இழக்கும். உடல் இழையங்களில் நீர் இழக்க அதிகளவு தாகம் ஏற்படும்.

மனிதனுக்கு மட்டும் அழுகை ஏன் வருகிறது?

நம்மால் ஒரு செயலைச் செய்ய முடியாதபோது செக்ரடோமோட்டார் நுணுக்கமாகச் செயல்பட்டு, கண்ணீர் சுரப்பியிலிருந்து கண்ணீரை சுரக்க வைக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why losing energy during run


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->