இந்த ஒற்றை பூவில் நாம் அறிந்திராத எண்ணிலடங்கா நன்மைகள்.! வாங்க தெரிஞ்சிக்கலாம்.! - Seithipunal
Seithipunal


ஆவாரம் பூ பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியதாகும். இதில் இருக்கக்கூடிய ஏராளமான மருத்துவ பயன்கள் நம் உடலுக்கு நன்மை பயக்கக்கூடியதாக உள்ளன. சாலையோரங்களில் இருக்கும் இது போன்ற செடிகளின் மருத்துவ பயன்களை பலரும் அறிந்திருப்பதில்லை.

ஆவாரம் பூவின் பயன்களில் முக்கியமானது இது உடலுக்கு குளிர்ச்சியை தருவதாகும். அந்த காலத்தில் நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள் ஆவாரம் பூவின் இலைகளை துணியில் கட்டி தலையில் வைத்துக் கொள்வார்கள். இதன் மூலம் நீண்ட தூர பயணங்களில் போது ஏற்படுகின்ற வெப்பம் தணிக்கப்படுகிறது.

உடலில் ஏற்படும் காய்ச்சலுக்கு ஆவாரம் பூவை போட்டு கொதிக்க வைத்த தண்ணீரை சிறுக சிறுக குடித்து வர இந்த மாதிரியான காய்ச்சல் இருந்தாலும் விரைவிலேயே குணமாகும்.

இந்தக் கோடை காலங்களில் கண்களில் ஏற்படும் கண் எரிச்சல், கண் சிவந்து போகுதல், கண் கட்டி போன்றவற்றை குணமாக்கும் சக்தி ஆவாரம் பூவிற்கு உண்டு இந்தப் பூவினை சுத்தம் செய்து ஒரு சில துளிகளை கண்களில் விட கோடைகாலங்களில் ஏற்படும் கண் வியாதிகள் குணமாகும்.

ஆவாரம் பூக்களை சுத்தம் செய்து விட்டு பச்சையாக மென்று சாப்பிட குடல்களில் இருக்கும் நச்சுத்தன்மை போய் வயிறு சுத்தமாகும். மேலும் கல்லீரலில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மையும் இது போக்க வல்லது.

ஆவாரம் பூவை அரைத்து புண்களின் மீது தடவி வர நல்ல நிவாரணம் கிடைக்கும். நாட்பட்ட புண்களும் சரியாகும் மேலும் தொற்று ஏற்படாமல் தடுக்கும். ஆவாரம்பூ விதையை அரைத்து பொடியாக்கி  அதை தண்ணீருடன் கலந்து நன்றாக கொதிக்க வைத்து குடித்து வர சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

unknown medical benefits of tarners cassia


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->