சிறுநீரக கற்களில் இருந்து.. தப்பிக்க இந்த ஒரு பூ போதும்.. பயன்படுத்தும் முறை.!
Sirukanpeelai poo For kidney stone
சிறுநீரக கற்களில் இருந்து தப்பிக்க ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களும், அதிக அளவிற்கு நீர் அருந்துவதும், உணவில் உப்பு குறைவாக சேர்த்துக் கொள்வதும் தீர்வாக இருக்கும். இதற்கு மாற்று கை வைத்தியம் ஒன்று உள்ளது. அதை பார்க்கலாம்.
சிறுகண்பீளை செடியில் இருக்கும் தண்டில் பூக்கின்ற பூக்கள் தான் இந்த சிறுநீரக கற்களை அகற்றக் கூடிய தன்மை கொண்ட சிறந்த மருந்து. இதை எப்படி சாப்பிடுவது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வேரோடு பிடுங்கப்பட்ட சிறுகண்பீளை செடி,
பால்,
நாட்டு சர்க்கரை.
சிறுகண்பீளை பூ மற்றும் அதன் வேர்களை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதில், கொஞ்சம் நாட்டு சர்க்கரையும் சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும். அத்துடன் கொஞ்சம் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலந்து இந்த பாலை ஒரு நாளைக்கு இரண்டு வேளை எடுத்துக் கொள்ளலாம். 50 முதல் 100 மில்லி வரை இந்த பாலை சாப்பிடலாம். இதை 10 முதல் 15 நாட்கள் குடித்தால் உடலில் இருக்கும் சிறுநீரக கற்கள் கரைந்து விடும் மாதவிடாய் கோளாறு இருப்பவர்களும் கர்ப்பிணி பெண்களும் இதை பாலில் கலந்து அல்லது கஷாயமாக குடித்துக் கொள்ளலாம்.
English Summary
Sirukanpeelai poo For kidney stone