முடி உதிர்தலை நிறுத்தி வேகமாக முடி வளர்க்கும் ‘பூசணி விதை எண்ணெய்’ — எப்படி பயன்படுத்த வேண்டும்?
Pumpkin seed oil stops hair loss and promotes faster hair growth how to use it
இன்றைய காலத்தில் முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் எண்ணிலடங்கா. சாதாரண தேங்காய் எண்ணெயை மட்டுமே பயன்படுத்தினால் பலருக்குப் பெரிய மாற்றம் தெரியாமல் போகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட விதை எண்ணெயை மட்டும் சரியாகப் பயன்படுத்தினால், முடி உதிர்தல் குறைந்து, வேகமாக புதிய முடி வளரத் தொடங்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அந்த அற்புதமான எண்ணெய்தான் பூசணி விதை எண்ணெய்.
ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கொண்ட பூசணி விதைகளில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மிக அதிகமாக உள்ளன. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், முடி வளர்ச்சிக்கு தேவையான பயோட்டின், வைட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துகளை நேரடியாக வேர்களுக்கு அளிக்கிறது. இதனால் முடி வேர்களே வலுப்பெற்று, உதிர்வு கணிசமாக குறையும்.
முக்கியமாக, பூசணி விதை எண்ணெயின் நடுத்தர அடர்த்தி முடியை இயல்பாக ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. வறண்ட, சுருண்ட முடி கொண்டவர்களுக்கு இது ஒரு வரம். பூஞ்சை தொற்றுகளை தடுப்பதால் பொடுகு பிரச்சனையும் குறையும். தொடர்ந்து பயன்படுத்தினால் முடி நுனி வரை ஆரோக்கியமாகி, அடர்த்தி அதிகரிக்கும்.
இந்த எண்ணெயை பயன்படுத்தும் முறை மிகவும் எளிது. எண்ணெயைக் கைப்பிடி அளவு எடுத்து தலையின் முழுப் பகுதிக்கும் நன்றாக மசாஜ் செய்து தடவ வேண்டும். பின்னர் முடியின் வேரிலிருந்து நுனிவரை சமமாகப் பரப்பவும். இரவு முழுவதும் எண்ணெயை ஆற விடுவது சிறந்தது. குறைந்தது 12 முதல் 24 மணி நேரம் வைத்தால், எண்ணெயில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களையும் முடி முழுமையாக உறிஞ்சிக் கொள்ளும்.
அடுத்த நாள் லேசான ஷாம்பூவால் வெதுவெதுப்பான நீரில் தலைக்குள். வாரத்திற்கு ஒருமுறை இந்த முறையைப் பின்பற்றினால், முடி உதிர்வு குறைந்து வேகமான வளர்ச்சி தொடங்கும். தொடர்ச்சியாக பயன்படுத்திவரும் பலருக்கும் மிகச்சிறந்த பலன்கள் கிடைத்துள்ளன.
English Summary
Pumpkin seed oil stops hair loss and promotes faster hair growth how to use it