இந்த பொருட்களை எல்லாம் கனவில் கண்டால் என்ன பலன் கிடைக்கும்..!
Kanavu Palankal
தூங்கும் போது கனவு வருவது என்பது சாதாரண விஷயம் தான். சில பொருட்களை நீங்கள் கனவில் பார்தால் அதிர்ஷ்டம் என ஜோதிட நிபுணர்கள் கூறுகிறனர். அவற்றை பற்றி தெரிந்துகொள்வோம்.
தேன் – பால்:
பால் மற்றும் தேனை கனவில் கண்டால் நீங்கள் செய்யும் வேலையில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், பால் கனவில் வந்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
தானியாங்கள்:
அறுவடை செய்த தானியங்களை கனவில் காண்பது மகிழ்ச்சியையும் செல்வத்தையும் தரும் என நம்பப்படுகிறது. தானியங்களை பற்றி கனவு காண்பது அதிர்ஷ்டத்தை தரும்.
மஞ்சள்:
மஞ்சளை கனவில் காண்பதால் மதிப்பு கூடும் என்பது நம்பிக்கை. மஞ்சளையும் குங்குமத்தையும் கனவில் கண்டால் மங்களம் உண்டாகும்.
பணம்:
உங்கள் கனவில் பணம் வருவது செழுமையின் குறியீடு. கனவில் பணம் வந்தால் மகிழ்ச்சி வெற்றியும் கிடைக்கும்.