#கோவை | மனைவியின் சகோதரியுடன் ஓட்டம் பிடித்த காதல் கணவன் போக்ஸோவில் கைது.!
husband escape wife sister
கோவை மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள மலையாண்டி பட்டிணத்தை சேர்ந்தவர் பிரபு. இவர் கடந்தாண்டு ஆனைமலையை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் தனது மனைவியின் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது மனைவியின் 17 வயது தங்கையுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்த கள்ளக்காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் அவர்கள் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் 25-ம் தேதி சிறுமி திடீரென மாயமானார். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் சிறுமியை பிரபு கடத்தி சென்றுள்ளதாக ஆனைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்ற பிரபுவை தேடி வந்தனர். இதனை தொடர்ந்து பிரபு பயன்படுத்திய செல்போன் டவரை காவல்துறையினர் கண்காணித்தனர். அப்போது பிரபு கோவையில் சிறுமியுடன் தங்கி இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து கோவை சென்ற காவல்துறையினர் பிரபுவை மடக்கி பிடித்து சிறுமியை மீட்டனர்.
பின்னர் ஆனைமலை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது பிரபு சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. இதன் பின்னர் காவல்துறையினர் பிரபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
husband escape wife sister