இரட்டை தொகுதிகளில் களம்:ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்?
Contesting in double constituencies Vijay follows Jayalalithaa style Why did he adopt the double constituency formula
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 களமிறங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எடுத்துள்ள முக்கிய முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரிய பேசுபொருளாகியுள்ளது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அவர் அறிவித்திருப்பது, ஒரு சாதாரண முடிவு அல்ல; கணக்கிட்டு எடுக்கப்பட்ட அரசியல் வியூகம் என பார்க்கப்படுகிறது.
தேர்தல் சட்டப்படி (RP Act Section 33(7)), ஒரே வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட அனுமதி உள்ளது. ஆனால் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றால், ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றொன்றை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் இடைத்தேர்தல் அவசியமாகிறது.
முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் விஜய், எந்தச் சூழலிலும் சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளார். ஒரு தொகுதியில் எதிர்பாராத பின்னடைவு ஏற்பட்டாலும், மற்றொரு தொகுதி பாதுகாப்பாக இருக்கும் என்ற அரசியல் கணக்கு இதற்குப் பின்னால் உள்ளது.
இந்த இரட்டை தொகுதி போட்டி தமிழகத்திலும், இந்திய அரசியலிலும் புதிதல்ல.
- ஜெயலலிதா (1991) – பர்கூர் & காங்கேயம்; இரண்டிலும் வெற்றி
- ஜெயலலிதா (2001) – 4 தொகுதிகளில் மனு; அனைத்தும் நிராகரிப்பு
- ரங்கசாமி (புதுச்சேரி) – பலமுறை 2 தொகுதிகளில் போட்டி; வெற்றி அனுபவம்
- நரேந்திர மோடி (2014) – வாரணாசி & வதோதரா; இரண்டிலும் வெற்றி
- ராகுல் காந்தி (2019) – அமேதி தோல்வி, வயநாடு வெற்றி
- ராகுல் காந்தி (2024) – ரேபரேலி & வயநாடு; இரண்டிலும் வெற்றி, பின்னர் ஒன்று ராஜினாமா
இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது ஒருபுறம் ‘பாதுகாப்பு வலையம்’ போல இருந்தாலும், மறுபுறம் விமர்சனங்களுக்கும் வழிவகுக்கும்.
“ஒரே தொகுதியில் நம்பிக்கை இல்லையா?” என்ற கேள்வி எழுவது இயல்பு.
ஆனால், புதிய கட்சி – முதல் தேர்தல் – முதல்வர் ஆசை என்ற சூழலில், விஜயின் இந்த முடிவு “ரிஸ்க் குறைக்கும் ஸ்ட்ராடஜி” என்று பல அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர்.
English Summary
Contesting in double constituencies Vijay follows Jayalalithaa style Why did he adopt the double constituency formula