தாய்ப்பால் சுரப்பு குறைவதற்கான காரணங்கள் என்ன?..!!
What are the causes of low breast feeding
இந்த உலகில் பிறந்த அணைத்து உயிர்களுக்கும் முக்கியமானது... கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் தாயார் உண்ணும் உணவுகளை உண்ணும் குழந்தைகள்., பிரசவத்திற்கு பின்னர் தாய்ப்பாலின் மூலமாக நல்ல உடல் சத்துக்களை பெறுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு சில வகையான உணவுகள் அலர்ஜியை ஏற்படுத்தும் என்பதால்., தாய்ப்பாலூட்டும் சமயத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து காண்போம்.
தினமும் அறிந்த தேநீரில் காபின் என்ற மூலப்பொருளானது இருக்கிறது. தேநீரை அருந்துவதால் புத்துணர்ச்சி மற்றும் உத்வேக ஆற்றல் பெற்றது போல இருக்கும்... இது உறக்கத்திற்கு கேடாக அமையும் என்பதால்., பாலூட்டும் சமயத்தில் தேநீரின் அளவை குறைப்பது நல்லது.

தினமும் கொட்டை வடியிலை நீரை (காபி) குடிக்கும் பழக்கம் இருந்தால்., காபியில் இருக்கும் காபின் தாய்ப்பாலில் கலந்துகொள்ளும். இதனால் குழந்தைக்கு செரிமான பிரச்சனையை ஏற்படுத்தலாம் வாய்ப்புள்ளதால்., குழந்தையின் உடலிலேயே தங்கி ஓய்வின்மை., எரிச்சல் மற்றும் வாயு பிரச்சனைகள் ஏற்படுத்தும்.. இதனால் காபியை குறைப்பது நல்லது.
காபி மற்றும் தேநீரை அருந்துவதால் குழந்தையின் உடலில் அலர்ஜி மற்றும் உணர்திறன் மாறுபாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனை கவனித்து கொள்வது நல்லது. ப்ரோக்கோலி நன்மை தரும் பொருள் என்றாலும்., செரிமானம் ஆக அதிகளவு நேரம் எடுக்கும் என்பதால்., குழந்தைக்கும் வாயு தொல்லையை ஏற்படுத்தும்.

செர்ரி பழத்தில் மெழுகு இயற்கையாக மெழுகு பொருள் இருப்பதால்., மலைச்சிகளுடன் வாயு தொல்லையை ஏற்படுத்தும். வேர்க்கடலை குழந்தைக்கு உணர்திறன் மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.. இருப்பினும் வேர்க்கடலையில் புரதச்சத்துக்கள் உள்ளதால் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்..
தாய்ப்பாலை அதிகரிக்க மூலிகைகள் மற்றும் கீரைகள் சாப்பிட வேண்டும்.. மிளகும் வோக்கோசு என்ற கொத்தமல்லி வகையை சார்ந்த மூலிகை தாய்ப்பால் சுரப்பை குறைக்கும். தாய்ப்பாலூட்டும் சமயத்தில் இதனை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதனைப்போன்று காரமான உணவுகளை தவிர்ப்பது மற்றும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
Tamil online news Today News in Tamil
English Summary
What are the causes of low breast feeding