வீட்டிலேயே செய்யும் கிரிஸ்பி கலாகண்ட் ரெசிபி- இனிப்பு சுவைக்கு இரு மடங்கு சந்தோஷம்!
Special Crispy Kalakand recipe make home Double joy this sweet treat
தீபாவளி இனிப்பு தவறியவர்களுக்கான கலாகண்ட் ரெசிபி – வீட்டில் எளிதாக செய்யலாம்!
தீபாவளிக்கு முறுக்கு, அல்வா, குலாப் ஜாமூன், லட்டு போன்ற எண்ணெய் பசைந்த இனிப்புகள் எல்லாம் செய்து சாப்பிட்டோம். ஆனால் இந்தியாவின் பிரபலமான கலாகண்ட் இனிப்பை பலர் மறந்து விடுவோம். இதோ, வீட்டிலேயே சுவையான கலாகண்ட் செய்ய ஒரு எளிய வழி!
தேவையான பொருட்கள்:
பால் – 1 லிட்டர்
நெய் – 1/2 கப்
சர்க்கரை – 1 கப் (அதிகமாக வேண்டுமானால் சேர்க்கலாம்)
ஏலக்காய்தூள் – 1 டீஸ்பூன்
குங்குமப்பூ – விருப்பப்படி
பிஸ்தா, பாதாம் – அலங்கரிக்க
எலுமிச்சை பழச்சாறு – 1 பழம்

பன்னீர் தயாரிக்கும் முறையே:
500 மிலி பாலை நன்கு கொதிக்க விடுங்கள்.
கொதிக்கும் போது அதில் எலுமிச்சை பழச்சாறு ஒரு சில நறுக்குகளாக சேர்க்கவும்.
பால் திரிந்து, தண்ணீர் தனியாக பிரிந்ததும் வடிகட்டி எடுக்கவும்.
பன்னீரை சுத்தமாக நீர்வைத்து வைத்தால் புளிப்பு கெட்டுபோகாது.
கலாகண்ட் செய்முறை:
1 லிட்டர் பாலை பாத்திரத்தில் நன்கு கொதிக்க விடவும். அடிக்கடி கிளறுங்கள், அடியில் பொராமல் இருக்க.
பால் க்ரீமி பதத்திற்கு வந்ததும், அதில் செய்த பன்னீரை சேர்த்து நன்கு கிளறவும்.
பால் வறிந்து, க்ரீமி கலவை அடைந்த பிறகு அரை கப் நெய் சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
1 கப் சர்க்கரை சேர்த்து நன்கு கரைக்கவும்.
இறுதியில் ஏலக்காய்தூள், விருப்பப்படி குங்குமப்பூ, பாதாம், பிஸ்தா சேர்த்து கிளறவும்.
கலவை நன்கு ஆறும்போது ஒரு பாத்திரத்தில் ஊற்றிப் நெய் தடவி அழுத்தி வைக்கவும்.
2 மணி நேரம் கழித்து ஆறிய கலாகண்ட் துண்டுகள் செய்து பரிமாறலாம்.
குறிப்பு: சிறிது கூடுதல் நேரம் கிளறி, நெய் போட்டு அழுத்தினால் கலாகண்ட் அதிக கெட்டியாய், நன்றாக வடிவம் பிடிக்கும்.
English Summary
Special Crispy Kalakand recipe make home Double joy this sweet treat