பிரசவத்திற்கு பின்னான தளர்ச்சியான மார்பகம்.! இயற்கையான முறையில் மார்பகத்தை பராமரிப்பது எப்படி?..!!
how to strength breast naturally after delivery
பெண்களுக்கு பொதுவாகவே பிரசவத்திற்கு பின்னர் மார்பகங்கள் இயற்கையாகவே தளர்ந்து விடும். பிரசவத்திற்கு பின்னர் குழந்தைகள் தாயிடம் தாய்ப்பால் குடிப்பது மற்றும் உடல் எடை அதிகரிப்பது மற்றும் உயர்த்து போன்ற காரணங்களால் மார்பகம் தளர்வடைய துவங்குகிறது. இதனை சரி செய்ய பெண்களுக்கு மார்பக கச்சை (பிரா) உதவி செய்யும். இந்த சமயத்தில் சவுகரியமான மற்றும் பொருத்தமான உள்ளாடையை தேர்வு செய்து அணிவது நல்லது. இதுமட்டுமல்லாது மார்பகங்கள் தளர்வடையாமல் இருக்க இருக்கும் வழிமுறைகள் குறித்து இனி காண்போம்.
பெண்களின் மார்பகம் தளர்வடைய பல காரணங்கள் உள்ளது. வயதின் காரணமாக மார்பகத்தை தங்கியிருக்கும் தசைகள் பலவீனமாவது., பிரசவத்திற்கு பின்னர் சுரக்கும் தாய்ப்பால் மற்றும் மார்பகத்தின் அளவு அதிகரிப்பது., குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கியதை நிறுத்திய பின்னர் பால் சுரப்பு நின்ற பின்னர் மார்பகங்கள் தளர்வடையும். உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் நடவடிக்கையின் காரணமாக மார்பகங்கள் தார்வடைவதை தடுக்கலாம். கர்ப்பமானதற்கு பின்னர் மார்பகத்தின் அளவு பெரிதாவது மற்றும் பிரசவத்திற்கு பின்னர் பால் ஊட்டுவதை நிறுத்திய பின்னர் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றால் சருமத்தில் இருக்கும் தசைகளில் தளர்வு ஏற்படுகிறது.
உடலின் எடையை குறைக்க நினைக்கும் பெண்கள் 2 கிமீ நிதானமான நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.. ஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்க நினைக்கும் பட்சத்தில் மார்பகங்கள் தளர்ந்துவிடும். புகைப்பழக்கம் உள்ள பெண்களுக்கு விரைவாக மார்பகம் தளர்ந்துவிடும். இதுமட்டுமல்லாது புகைப்பழக்கத்தால் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. உடல் எடை அதிகமாக இருக்கும் பட்சத்தில் இயன்றளவு உடலின் எடையை குறைக்கலாம். அதிகளவு உடல் பருமனாக இருந்தால்., மார்பகத்தின் அளவும் மாறிக்கொண்டே இருக்கும். மார்பகத்தின் தளர்ச்சியும் விரைவில் ஏற்படும். சரியான அளவுடைய உள்ளாடையை அணிவது மற்றும் தூங்கும் சமயத்தில் உள்ளாடையின்றி உறங்குவது போன்றவை செய்யலாம்.
பிரசவத்திற்கு பின்னர் மார்பகங்கள் தளராமல் இருக்க :
ஆசனம் - புஜங்காசனா:
புஜங்கா என்பது பாம்பு படமெடுக்கும் சமயத்தில் நிற்கும் தோற்றம் போன்றது. இந்த ஆசனத்தை படத்தில் உள்ளது போன்று எளிதாக செய்து விடலாம். முதலில் குப்புற படுத்துக்கொண்டு கால்களை நீட்டி இருக்க வேண்டும். பின்னர் கைகளை பக்கவாட்டில் வைத்து., தோள்பட்டைக்கு அருகில் கொண்டு வந்து., மூச்சினை இழுத்து தலை., தோள்பட்டை., மார்பகம்., நெஞ்சு மாறும் வயிற்று பகுதியை தூக்க வேண்டும். இந்த சமயத்தில் இடுப்பு., தொடை மற்றும் கால்கள் தரையில் இருக்க வேண்டும்.
இவ்வாறாக சுமார் 10 நொடி மூச்சை அடக்கி., இந்த நிலையிலேயே இருக்க வேண்டும். பின்னர் மெதுவாக மூச்சை வெளியே விட்டு கீழே படுத்து கொள்ள வேண்டும். இந்த முறையினை மூன்று முறை செய்து வர நல்லது.
செய்ய கூடாதவர்கள்:
இந்த நிலையினை கர்ப்பிணி பெண்கள்., முதுகுத்தண்டுவட பிரச்சனை இருக்கும் நபர்கள்., தலைவலி இருக்கும் நபர்கள்., வயிற்றில் அறுவை சிகிச்சை இருக்கும் நபர்கள் மற்றும் கார்பல் டணல் சிண்ட்ரோம் பிரச்சனை இருக்கும் நபர்கள் செய்ய கூடாது. மேலும்., குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் ஒரு வருடத்திற்கு பின்னர் இப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
புஜங்காசனா ஏற்படும் பலன்கள்:
தளர்ந்திருந்த மார்பகங்கள் உறுதியாகும். இதனை குறைந்தது 3 மாதங்கள் முதல் நான்கு மாதங்கள் செய்து வர வேண்டும். நமது தோள்பட்டையானது உறுதியாகும். பின் இடுப்பில் இருக்கும் சதைகள் கரையும். ஆஸ்துமா பிரச்சனை சரியாகும். செரிமானம் சீராக நடைபெற்று உடல் நலமானது பாதுகாக்கப்படும்.
பிற முறைகள்:
1) இரண்டு ஐஸ் கட்டிகளை துணியில் கட்டி மார்பகத்தின் மீது ஒரு நிமிடம் வரை வைத்து மசாஜ் செய்து வந்தால் மார்பகங்கள் இறுக்கமாகும். ஐஸ் கட்டியினை வைக்கும் போது ஒரு நிமிடத்திற்கும் மேலாக வைத்திருக்கும் பட்சத்தில்., குளிரின் காரணமாக தற்காலிக மறந்துபோகும் தன்மையானது மார்பகத்தில் ஏற்பட வாய்ப்புள்ளது.
நல்ல உலர்ந்த மற்றும் இலகுவான மற்றும் மென்மையான (Soft) துணியை வைத்து ஐஸ் கட்டியினால் தேய்க்கப்பட்ட பின்னர் துடைத்துவிட்டு., சரியான அளவுள்ள உள்ளாடையை அணிந்து., தலையணை மீது சாய்ந்து 30 நிமிடங்கள் இருந்த பின்னர் இயல்பு நிலைக்கு திருப்ப வேண்டும். இதனை தினமும் இரண்டு முறை வீதம்., 3 மாதத்திற்கு சேமித்து வர வேண்டும்.
2) உள்ளங்கையில் ஆலிவ் எண்ணையை ஊற்றிக்கொண்டு நன்றாக இரு கைகளிலும் படரும் வகையில் தேய்த்துவிட்டு., மார்பகத்தில் கீழிருந்து மேலாக சுமார் 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும்.. இதனால் இரத்த ஓட்டமானது அதிகரித்து., செல்களினை சரி செய்யும். இந்த முறையை வாரத்திற்கு நான்கு நாட்கள் செய்து வரலாம். ஆலிவ் எண்ணெய் இல்லாத பட்சத்தில் பாதாம் எண்ணெய் மற்றும் அவகோடா எண்ணெய் உபயோகம் செய்யலாம்.
3) வெள்ளரிக்காய் (அரைத்தது)., 1 தே.கரண்டி வெண்ணெய் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவினை சேர்த்து பேஸ்ட்டாக நன்றாக கலந்து மார்பகத்தில் பூசி சுமார் அரை மணிநேரம் கலந்த பின்னர் நீரினால் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வர மார்பகத்தின் தசைகள் உறுதியாகும்.
இதனைப்போன்று வாரத்திற்கு இரு முறை முட்டையுடன் வெங்காய சாறு கலந்து மார்பகத்தில் தேய்த்து சுமார் 30 நிமிடங்கள் கழித்து கழுவி வருதல்., தினமும் ஒரு முறை மாதுளை விதையின் எண்ணெய்யை தேவையான அளவு எடுத்து கொண்டு மார்பகத்தின் கீழிருந்து மேலாக மசாஜ் செய்வது., வாரத்திற்கு இரு முறை வெந்தயத்தை ஊற வைத்து நன்றாக அரைத்து மார்பகத்தில் பூசி 10 நிமிடங்கள் கடந்த பின்னர் இளம் சூடுள்ள நீரில் கழுவுதல்., வாரத்திற்கு நான்கு முறை கற்றாழை ஜெல்லை எடுத்து மார்பகத்தின் கீழ் இருந்து மேலாக மசாஜ் செய்வது போன்றவற்றின் மூலமாக மார்பகத்தின் தசைகள் உறுதியாகும்.
நினைவில்:
மார்பகத்தின் இறுக்கம் மற்றும் உடலின் எடை போன்றவற்றில் டயட் என்பது கூடவே கூடாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும் சமயத்தில் நீச்சல் பயிற்சியை மேற்கொள்ளலாம். ஜாகிங் மற்றும் ரன்னிங் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. வாக்கிங் செல்லும் சமயத்தில் சரியான அளவுள்ள மார்பக உள்ளாடையை அணிவது நல்லது. எந்த சமயத்திலும் நிமிர்ந்து அமர்வது மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது போன்றவை செய்யலாம். சரியான அளவுள்ள மார்பகத்திற்கான உள்ளாடையை அணிவது முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Tamil online news Today News in Tamil
English Summary
how to strength breast naturally after delivery