தாமரைப்பூவின் அசத்தல் நன்மைகள் என்னென்ன?..!! - Seithipunal
Seithipunal


நமது தமிழ் மருத்துவ முறைகளில் நாம் சாப்பிடும் உணவில் இருந்து, சூடும் பூக்கள் வரை பல நன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அந்த வகையில், இன்று நாம் தாமரை பூவில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்து காண்போம்.

தாமரைப்பூ மாரடைப்பு பிரச்சனை உள்ளவர்கள், மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க உதவி செய்கிறது. தாமரைப்பூவின் தண்டு, மகரந்தம், விதை என அனைத்துமே சித்த மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நமது மூளையில் உள்ள திசுக்களை பாதுகாத்து, மூளையை விழிப்புணர்வுடன் இருக்க வைக்கவும், இதயத்தில் இரத்த அழுத்தம் சீராகி மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவி செய்கிறது. 

தாமரைப்பூ இதழ்களை நீரில் போட்டு, மிளகு மற்றும் ஏலக்காய் சேர்ந்து சுண்ட காய்ச்சி தொடர்ந்து 60 நாட்கள் பருகி வந்தால், இதய தசைகள் நன்கு வலுப்பெறும். பாதிப்படைந்த கல்லீரல் தனது கழிவுகளை நீக்கும். கல்லீரல் கழிவுகளை நீக்க வெண்தாமரையை உபயோகம் செய்யலாம்.

தாமரைப்பூ தண்டுகளை சமைத்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். தரைமரைப்பூவின் மகரந்தத்தூளை கஷாயமாக செய்து குடித்து வர காதுகளின் நரம்புகள் பலன் பெரும். ஆண்மைக்குறைவு பிரச்சனை சரியாகும். தாமரைப்பூவின் விதைகள் சிறுநீரக திசுக்களை பாதுகாக்கும். இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சத்துக்களை குறைக்கும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of Lotus Flower


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->