சித்தப்பாவை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய வாலிபர் - கிருஷ்ணகிரியில் கொடூரம்.!
youth fire her relative in krishnagiri for property case
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னவன். இவருக்கும் அண்ணன் மகனான செந்தில் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதேபோல், கடந்த 19ஆம் தேதி இரு குடும்பத்தினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, செந்திலின் தாயார் ராணி போலீசில் கொடுத்த கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பட்டிணம் காவல் நிலையத்தில் சின்னவன் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையறிந்த, நான்கு பேரும் தலைமறைவாகினர். இந்த நிலையில் காவேரிப்பட்டிணத்தில் உள்ள மாட்டுத்தீவன கடையில் அமர்ந்திருந்த சின்னவனை பார்த்த செந்தில், தனது கையில் வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த சின்னவனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். 70 சதவீத தீக்காயங்களுடன் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
youth fire her relative in krishnagiri for property case