தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.!!
Heavy rain yellow Alert for 15 districts in tamilnadu
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. பெரும்பாலான வட மற்றும் உள் மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் மாலை 4 மணி வரை தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பூர், தேனி மற்றும் தென்காசி ஆகிய 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
English Summary
Heavy rain yellow Alert for 15 districts in tamilnadu