பாலியல் தொல்லை கொடுத்தவரை வீடு புகுந்து வெட்டிக் கொன்று எரித்த பெண்கள்!
Woman stabbed to death and burnt to death in her house
நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த 60 வயது நபரை, பெண்கள் குழு ஒன்று கொன்று உடலை எரித்த சம்பவம் ஒடிசாவில்,அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக 8 பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, என்னதான் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி குற்றங்களை தடுத்தாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் பாலில் குற்றங்களும் நாளுக்கு நாள் அது அதிகரித்து செல்கிறது, சமீப காலமாக பள்ளி மாணவிகள் முதல் சிறிய பெண்கள் முதல் பெரிய பெண்கள் வரை அவர்களுக்கு பாலில் தொல்லையானது அளிக்கப்பட்டு வருகிறது, சில இடங்களில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.இந்தநிலையில் நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த 60 வயது நபரை, பெண்கள் குழு ஒன்று கொன்று உடலை எரித்த சம்பவம் ஒடிசாவில்,அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவை சேர்ந்த 60 வயதான ஒருவர் கடந்த நான்கு ஆண்டுகளாக பல கிராமப் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் அந்த நபரை போட்டு தள்ள முடிவு கட்டினர்.
அதன்படி திட்டமிட்ட பெண்கள் ஜூன் 3 ஆம் தேதி இரவு, பாதிக்கப்பட்ட பெண்களின் குழுவினர், பாலியல் தொல்லை கொடுத்த நபரை அவரது வீட்டிலேயே வெட்டிக் கொலை செய்து, பின்னர் உடலை எரித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்ட பெண்களில் குறைந்தது ஆறு பேர், தாங்களும் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒப்புக்கொண்டனர்.
பல கிராமப் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் முடிவுகட்டவே இந்த கொடூர முடிவை எடுத்ததாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.போலீசார் உடலின் எஞ்சிய பாகங்களை மீட்டெடுத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்கள் இதற்கு முன் எந்தப் புகாரும் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
Woman stabbed to death and burnt to death in her house