மதுவை பங்கிடுவதில் தகராறு.. ஆண் நண்பரை கொலை செய்த பெண் கைது..!
Woman killed his friend in kerala
மதுவை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஆண் நண்பரை டிக் கொன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியில் வசித்து வருபவர் அப்துல் சலாம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செலினா என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அப்துல் சலாமும் செலினாவும் ஒன்றாக மது அருந்துவதையும் அதன் பின் தொடர்ன்ந்து பஸ் நிலையத்தில் தங்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செலினா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக தாக்கி தப்பியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அப்துல் சலாமை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக செலினா கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் அப்துல் சலாமை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Woman killed his friend in kerala