கேரளா: தொண்டையில் சிக்கிய பரோட்டா... பெண் பரிதாபமாக பலி.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் தொண்டைக்குள் பரோட்டா சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மலப்புறம் மாவட்டத்தில் உள்ள ஆணைக்கரை பகுதியை சேர்ந்தவர் தம்பி. இவருடைய மனைவி ஜானகி (68) நேற்று காலை வீட்டில் பரோட்டா மற்றும் முட்டை கறி சமைத்துள்ளார். இதையடுத்து, கணவன்-மனைவி இருவரும் பரோட்டா சாப்பிட்டு உள்ளனர் அப்பொழுது திடீரென ஜானகியின் தொண்டைக்குள் பரோட்டா சிக்கிக்கொண்டுள்ளது.

இதனால், சரியாக மூச்சுவிட முடியாமல் ஜானகிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கணவர் மற்றும் உறவினர்கள் ஜானகியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், ஜானகி மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் பிரேத பரிசோதனையில் தொண்டையில் பரோட்டா சிக்கியதால் ஜானகி உயிர் எழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman killed by Parotta stuck in throat in kerala


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->