நண்பர்களுடன் ஊர் சுற்றிய கணவர்.! மனைவி எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் கணவர் தன்னை சரியாக கவனிக்காமல் நண்பர்களுடன் சுற்றியதால் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் 

கர்நாடகா மாநிலம் துமகூரு பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம். இவரும், குப்பி பகுதியை சேர்ந்த மவுனிக்கா (21) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இவர்கள் இரண்டு பேரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் வாடகை வீட்டில் தங்கி வசித்து வந்தனர். இதையடுத்து ஆபிரகாம் மனைவியை சரியாக கவனிக்காமலும், மனைவியுடன் நேரத்தை செலுத்தாமல் அவரது நண்பர்களுடன் வெளியே சுற்றி வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து மவுனிக்கா இது குறித்து பெற்றோரிடம் கூறியபோது அவரது தாயும் மவுனிக்காவை திட்டியுள்ளார்.

இதனால் கடந்து சில நாட்களாக மவுனிக்கா மனவேதனை இருந்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது மவுனிக்கா நண்பர்களுடன் வெளியே சென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். இருப்பினும் ஆபிரகாம் வெளியே சென்றுள்ளார்.

இதனால் மன வேதனையில் மவுனிக்கா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மவுனிக்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wife commits suicide in Karnataka


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->