போரை நிறுத்த பாகிஸ்தான் கெஞ்சியது ஏன்..?முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் விளக்கம்..!
Why did Pakistan beg to stop the war Army Chief Anil Chauhan explains
போரை நிறுத்த பாகிஸ்தான் இந்தியாவின் கெஞ்சியதாக மஹாராஷ்டிர மாநிலம் புனே பல்கலையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தியாவை தோற்டிக்க வேண்டும் என 48 மணி நேரமாக பாகிஸ்தான் ராணுவம் செய்த முயற்சியை 08 மணி நேரத்தில் இந்தியா முறியடித்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த மாதம் 07-ஆம் தேதி தாக்குதல் நடத்த துவங்கிய போது, பாகிஸ்தானுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் மோசமாக நடந்து கொண்டதாகவும், அப்போதும், நம் மீதும், ராணுவ நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தினால், இந்தியா பதில் தாக்குதல் நடத்தும் என கடுமையாக தாக்குதல் நடத்தும் என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தானின் 48 மணி நேர முயற்சியை, 08 மணி நேரத்தில் இந்தியா முறியடித்தது. இதனால், அந்நாடு போரை நிறுத்தி விட்டு பேச விரும்புவதாக தொலைபேசி மூலம் தெரிவித்ததாக முப்படை தளபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் முடியவில்லை. அது இன்னும் தொடர்கிறதாகவும், தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய தேவை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், போர் முறையில், ஆபரேஷன் சிந்தூர் புதிய வரலாற்றை படைத்துள்ளதாகவும், எதிராளிக்கு எதிராக வெற்றிகரமாக நடவடிக்கை எடுக்கப்பட்ட்டுள்ளதோடு, ஆழமாகவும், துல்லியமாகவும், தாக்குதல் நடத்த முடிந்தால் அது மிகப்பெரிய சாதனை என்று தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு முன்னர், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், இந்தியாவிற்கும், ஹிந்துக்களுக்கும் எதிராக ஒரு விஷத்தை கக்கினார் என்றும், தண்ணீரும், ரத்தமும் ஒன்றாக பாய முடியாது. பயங்கரவாதத்தை போருடன் சேர்த்து புதிய தடையை ஏற்படுத்தி உள்ளோம் என்று முப்படை தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Why did Pakistan beg to stop the war Army Chief Anil Chauhan explains