கட்டுக்கட்டாக கோடி கணக்கில் சிக்கிய பணம்., அமைச்சரின் உதவியாளரும் கைது.! - Seithipunal
Seithipunal


மேற்குவங்க மாநில மம்தா அமைச்சரவையின் தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ரூ.100 கோடி ஊழல் நடைபெற்றதாக புகாரில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 2016-ம் ஆண்டு மம்தா தலைமையிலான அரசு, பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிப்பதற்கு தேர்வு ஒன்றை நடத்தியது. 

இந்த தேர்வின் மூலம் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சுமார் 100 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்துள்ளதால் அமலாக்கத் துறையும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணையில் இறங்கியது.

இந்த நிலையில், நேற்றைய தினம் இவ்வழக்கு குறித்து 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதில், அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நண்பர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் 20 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்ட நிலையில், இன்று காலை பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து அமைச்சரை கொல்கத்தா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி, அவரை 2 நாள் அமலாக்கத்துறை காவலில் சிறை வைக்கப்பட்டார்.

இந்நிலையில், அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal Minister Partha Chatterjee arrested case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->