பழிக்கு பழி வாங்க..10 பேர் உயிரோடு எரித்து கொலை செய்த.. கொடூர சம்பவம்.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கத்தில் கிராம துணைத்தலைவர் கொலை செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று பல குடிசைகளுக்கு தீ வைத்ததில் சுமார் பத்து பேர் உயிரோடு எரித்துக் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பிர்பம் அருகே ராம்புரஹக் பகுதியிலுள்ள பகுடி கிராமத்தின் துணைத் தலைவர் திங்கட்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளர்கள் பல குடிசைகளுக்கு தீ வைத்ததில் சுமார் 10 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பரோசல் கிராமத்தின் துணை தலைவராக இருந்தவர் பது ஷேக். இவர் மீது கடந்த திங்கட்கிழமை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் இச்சம்பவம் குறித்து ஆத்திரமடைந்த இவரது ஆதரவாளர்கள் சிலர், எதிர் தரப்பினரின் பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்த குடிசைகளுக்கு தீ வைத்துள்ளனர்.

மேலும் தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்களையும் சம்பவ இடத்திற்கு உள் நுழைய விடாமல் அந்த கும்பல் தடுத்துள்ளது. இந்த தீவிபத்தில் குறைந்தபட்சம் 10 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

West Bengal house fire incident


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->