வரிசையில் நின்ற வாக்காளர்கள்...உள்ளே வந்த யானை! - வாக்குச்சாவடியில் பரபரப்பு...!
Voters standing line elephant entered There commotion polling station
மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக தீவிர அரசியல் சூழலில் நடைபெற்று வருகிறது. அதன் படி, முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு திட்டமிடப்பட்டுள்ளது. இன்றைய தினம் நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவு மாநிலம் முழுவதும் பரபரப்பான நிலையில் முன்னெடுக்கப்படுகிறது.

முதல்கட்ட தேர்தலில் மட்டும் சுமார் 3.60 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பதிவு செய்ய உள்ளனர். இவர்களின் வசதிக்காக 44,378 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, தேர்தல் இயந்திரம் முழு வீச்சில் செயல்படுகிறது.
மேலும், பாதுகாப்பு ஏற்பாடாக சுமார் 2.5 லட்சம் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.காலை முதலே வாக்குப்பதிவு உற்சாகத்துடன் நடைபெற்று வந்த நிலையில், ஜார்கிராம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் எதிர்பாராத சம்பவம் பரபரப்பை கிளப்பியது.
திடீரென காட்டு யானை ஒன்று வாக்குச்சாவடிக்குள் நுழைந்ததால், அங்கு வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் பதற்றத்தில் சிதறி ஓடினர்.இந்த திடீர் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
உடனடியாக நடவடிக்கை எடுத்த காவலர்கள், உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் யானையை அப்புறப்படுத்தினர். பின்னர் சூழ்நிலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து, வாக்குப்பதிவு மீண்டும் வழக்கமான நிலைக்கு திரும்பியது.
English Summary
Voters standing line elephant entered There commotion polling station