30 நாட்களில் 24 தற்கொலைகள்... ஊரடங்கால் அரங்கேறிய சோகங்கள்.!!
Uttarkhand state 30 days 24 suicide due to corona virus amid
கரோனா ஊரடங்கு காரணமாக பலரும் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த சமயத்தில், வேலையில்லாத விரக்தியில் சிலர் தங்களின் உயிரை மாய்த்துக்கொள்ளும் சோக முடிவுகளும் அரங்கேறி வருகிறது.
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டும்கா மாவட்டத்தில் ஊரடங்கு துவங்கிய மார்ச் 24 ஆம் தேதி முதல் மே மாதம் 24 ஆம் தேதி வரை, இரண்டே மாதத்தில் மொத்தமாக 24 பேர் தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறாக தற்கொலை செய்துகொண்ட நபர்களில் 20 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்தும், 4 பேர் விஷம் அருந்தியும் தற்கொலை செய்துள்ளனர். இவர்கள் பயம், கவலை, தூக்கமின்மை மற்றும் கோபம் போன்ற காரணத்தால் இத்தற்கொலைகள் நடந்துள்ளதாக மனநலம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒரே மாதத்தில் சுமார் 24 தற்கொலைகள் நடந்துள்ளதால், காவல் துறையினரும் தற்கொலைக்கான விபரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Uttarkhand state 30 days 24 suicide due to corona virus amid