சிறுவனைக் கொன்று ரத்தத்தை குடித்த பெண்.. வழக்கில் பரபரப்பு தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


சமீபகாலமாகவே நரபலி, பூஜை என்று மனிதர்களை கொலை செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஒரு காலகட்டத்தில் இதுபோன்ற பூஜைகளுக்கு பலி கொடுக்க எலுமிச்சை பழத்தை பயன்படுத்துவார்கள்.

அதன் பின் ஆடு, மாடு, கோழிகளை பலி கொடுக்க துவங்கினார்கள். இப்போது, இதையெல்லாம் தாண்டி மனிதர்களை மனிதர்களை வெட்டிக்கொண்டு பூஜை நடத்தும் சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மூட நம்பிக்கைகளால் இது போன்ற கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2005இல் ஜும்கா கிராமத்தில் வசிக்கும் தன் தேவி என்ற பெண் பத்து வயது சிறுவனை கொலை செய்த வழக்கில் இன்று அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுவனை கொலை செய்த தன் தேவி பின் அந்த சிறுவனின் உடலை கிழித்து ரத்தத்தை குடித்து இருக்கின்றார். சில சடங்குகளுக்காக இவ்வாறு அந்த பெண் செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வழக்கில் தற்போது சம்பந்தப்பட்ட குற்றவாளி பெண்ணான தன் தேவிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh women Kill and Drink Blood


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->