ஆசிரியை திட்டியதால் ஆத்திரம்.. விலைமாது என சித்தரித்து போட்டோவுடன் நம்பரை பகிர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவன்.! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா பகுதியை சார்ந்த 9 ஆம் வகுப்பு மாணவர், 35 வயது ஆசிரியையிடம் கணிதம் டியூசன் பயின்று வருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஆசிரியை மாணவரை கணிதம் சரியாக வரவில்லை என்று கூறி திட்டியதாகவும், இதனால் நீ டியூசனுக்கு வர வேண்டாம் என்றும் கூறியதாகவும் தெரியவருகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த மாணவன், டியூசனுக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். ஆசிரியை வாழ்க்கைக்கு தேவையான பாடத்தை சொல்லிக்கொடுக்கிறார் என்று பெற்றோர்கள் அறிவுரை கூறியும், மாணவர் டியூசனுக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து வீட்டிலும் பெற்றோர்கள் திட்டியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து கடுமையான ஆத்திரத்திற்கு உள்ளாகிய மாணவன், ஆசிரியரை பழிவாங்கும் பொருட்டு தனது உறவினரின் உதவியுடன் ஆசிரியையின் புகைப்படம் மற்றும் வாட்சாப் எண்ணை விலைமாது போல சித்தரித்து பகிர்ந்துள்ளார். 

இதனைக்கண்ட பலரும் ஆசிரியைக்கு இரவு நேரங்களில் அலைபேசியில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுக்கவே, ஆசிரியை சைபர் கிரைம் காவல்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணை செய்த போது, சிறுவனின் செயல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுவன் மற்றும் அவருக்கு உதவி செய்த உறவினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Teacher Mobile Number Miss Used by Student like Prostitute


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->