பிஸ்கட் கம்பெனி தொழிலாளர்களை ஏற்றி சென்று பேருந்து கோர விபத்து.. 17 பேர் பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் சசெண்டி பகுதி அருகே, சுமார் 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட பிஸ்கட் நிறுவனத்தின் பேருந்து பெரும் விபத்திற்கு உள்ளாகியது. இந்த பேருந்து கான்பூரில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டு இருக்கையில், இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. 

பேருந்தும் - காரும் நேருக்கு நேர் மோதி அரங்கேறிய கோர விபத்தில், சுமார் 17 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். பின்னால் வந்த வாகனங்களும் விபத்தில் சிக்கியுள்ளது. மேலும், நான்கு பேர் பலத்த காயம் அடைந்துள்ளதுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்ட அதிகாரிகள், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து தொடர்பாக உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், பலியானவர்கள் மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 
 
Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Kanpur Road Accident Biscuit Company Employees Died 9 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->