வகுப்பறையில் மதுபான பாட்டில் வைத்திருந்த ஆசிரியர்.. பள்ளி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் என்ற இடத்தில் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் உதவி ஆசிரியராக சைலேந்திரா சிங் கவுதம் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் நேரத்தில் மது பாட்டிலை உடன் வைத்திருந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகியது. அந்த வீடியோவில் தனது இருக்கையின் பின்பும், மேஜையின் கீழேயும் மது பாட்டில்களை சைலேந்திரா சிங் கவுதம் வைத்திருந்தார்.

இதையடுத்து டெல்லி மகளிர் ஆணைய தலைவரும், சமூக ஆர்வலருமான ஸ்வாதி மாலிவால் இச்சம்பவத்தின் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உத்திரபிரதேச காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து சைலேந்திரா சிங் கவுதமை அம்மாநில கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. குற்றச்சாட்டு தொடர்பாக 3 அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

uttar pradesh drinking bottle in class room


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->