வீராங்கனைக்கு லட்டில் போதைப் பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சாமியார்கள்!
Uttar Pradesh abuse case
உத்தரப் பிரதேசம் கோவிந்த் நகர் பகுதியில் உள்ள ஆசிரமத்தில், 30 வயது தேசிய அளவிலான டேக்வாண்டோ வீராங்கனை மீது நடைபெற்ற கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின்படி, ஒரு முதியவர் கடைக்காக இடம் கொடுக்க ஆசிரமத்தில் செல்வாக்கு உள்ளவர்களுடன் சந்திப்பை ஏற்பாடு செய்வதாக கூறினார். அவருடைய வார்த்தைகளை நம்பிய பெண், ஜனவரி 28 அன்று ஆசிரமத்திற்குச் சென்றபோது, போதைப் பொருள் கலந்த லட்டு கொடுக்கப்பட்டதாகவும், பின்னர் மூன்று பேர் அவரை வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த செயல்களை வீடியோ எடுத்து அதைக் கொண்டு மிரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். இறுதியாக தைரியமாகி, தெற்கு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் கோவிந்த் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரம அறை ஆய்வு செய்யப்பட்டதாக துணை ஆணையர் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார். விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.