இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புதிய விதிமுறை: இனிமேல் 02 ஹெல்மெட்டுகள் கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு..! - Seithipunal
Seithipunal


நாட்டில் சாலை விபத்துக்களின் என்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பெரும்பாலும் இருசக்கர வாகனங்களில் செல்லுவோர் உரிய பாதுகாப்பின்றி செல்வதால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றது. இந்நிலையில், வாகன ஓட்டுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு சில பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்து உத்ரவிட்டுள்ளது. 

புதியதாக வாங்கப்படும் அனைத்து வகை இருசக்கர வாகனங்களுடன் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் விற்பனையாகும் அனைத்து வகை இரு சக்கர வாகனங்களுடன் கட்டாயமாக, இந்திய தர நிர்ணயத்தால் (BIS) சான்றளிக்கப்பட்ட 02 ஹெல்மெட்டுகளை வழங்கவேண்டும் என்று அறிவித்துள்ளது.

இதேபோன்று ஏபிஎஸ் (ABS) என்ற நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட பிரேக் அமைப்புகள் பொருத்தப்பட வேண்டும் என்றும்,  சாலை பாதுகாப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த புதிய விதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை அமைச்சகம் விரைவில் வெளியிட்டப்படவுள்ளது.  அத்துடன், நாடு முழுவதும் மொத்தமாக பதிவாகும் சாலை விபத்துகளில் இறக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும் 44 சதவீதம் பேர் அடங்குகின்றனர்.

தற்போது 125 CC-க்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே ABS பாதுகாப்பு கட்டாயமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Union Road Transport Ministry says 02 helmets will be mandatory for two wheeler riders from now on


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->