இலங்கையில் கார் சாகசத்தின் போது பரிதாபம்.! இரண்டு மாணவர்கள் பலி - Seithipunal
Seithipunal


இலங்கை நாட்டின் பதுலா நகரில் கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இலங்கை நாட்டின் பதுல்லா நகரில் கார் சாகசம் மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சி மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள்  உற்சாகத்துடன் கலந்து கொண்டு சாகச நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மாணவர்கள் கூட்டமாக கார்களில் அமர்ந்து சாகசங்கள் செய்தபடி மைதானத்திற்குள் நுழைந்தனர். இந்த சாகசங்கள் சுற்றியிருந்து ரசிப்போர்களை மெய்சிலிர்க்க வைத்தன. இந்த நிகழ்வில் ஒவ்வொரு வாகனமும் திடலுக்குள் வேகமாகச் சென்று  சாகசங்களை நிகழ்த்தியது.

இந்த நிகழ்வின்போது வேகமாக வந்த கார் ஒன்று சாகசத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து  கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two students dead due to the car stunt goes wrong


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->