கர்நாடகாவில் சோகம்... நீர்யானை தாக்கியதில் 27 வயது பயிற்சி பெண் மருத்துவர் பலி...!
Tragedy Karnataka 27 Year Old Female Medical Intern Killed Hippo Attack
கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் உள்ள தியாவரேகொப்பா வனவிலங்கு சரணாலயத்தில், பெங்களூருவைச் சேர்ந்த 27 வயது பயிற்சி கால்நடை மருத்துவர் சமீக்ஷா ரெட்டி கடந்த மூன்று மாதங்களாகப் பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு சுமார் 11:30 மணியளவில் அவர் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்த சினையாக இருந்த நீர்யானை ஒன்று அவரைத் தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்த சமீக்ஷா ரெட்டி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6:30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
English Summary
Tragedy Karnataka 27 Year Old Female Medical Intern Killed Hippo Attack