கிருஷ்ணகிரி: விறகு எடுக்கச் சென்ற அக்கா தம்பி! ஏரியில் மூல்கி பரிதாப பலி.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் ஏரியில் மூழ்கி அக்கா மற்றும் தம்பி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்தவர் முருகன். இவரது குழந்தைகள் புவனா மற்றும் விக்னேஷ. இன்று பள்ளி விடுமுறை என்பதால்  அருகிலுள்ள மாத்தூர் ஏரி பகுதியில் விறகு  எடுப்பதற்காக சென்றுள்ளனர்.

விறகு எடுத்துவிட்டு இருவரும் மத்தூரில் ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏரியில் மூழ்கி புவனாவும் விக்னேஷ்வரும் மரணம் அடைந்துள்ளனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இரண்டு குழந்தைகளும் ஏரியில் மூழ்கி இருந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சார்ந்த அக்கா மற்றும் தம்பி இருவரும் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tragedy in Krishnagiri district sister and brother who went to collect firewood became a pitiful victim


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->