பக்தர்கள் கவனத்திற்கு: திருப்பதி இலவச தரிசன முறையில் மாற்றம்! - Seithipunal
Seithipunal


திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்துக்காக அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.

ஸ்ரீவாரி மெட்டு வழியில் தினமும் 5,000 இலவச தரிசன டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. ஆனால், சில வாடகை வாகன ஓட்டுநர்கள் டிக்கெட் பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபட்டு வருவதால், இந்த முறையை திருப்பதி தேவஸ்தானம் மாற்றியுள்ளது.

இதன்படி, ஸ்ரீவாரி மெட்டு பகுதியில் உள்ள சீனிவாச மங்காபுரம் அருகே இருந்த டிக்கெட் கவுண்டர் தற்போது அலிபிரி பகுதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மத்திய தொல்லியல் துறையின் அனுமதி கிடைக்காததால், ஸ்ரீவாரி மெட்டில் நேரடி டிக்கெட் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இனி, ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் வரும் பக்தர்கள் வெள்ளிக்கிழமை மாலையில் அலிபிரியில் டிக்கெட் பெற்றுக் கொண்டு சனிக்கிழமை தரிசனம் செய்ய வேண்டும்.

மேலும், அந்த டிக்கெட்டுகள் நடைபாதையின் 1200-வது படியில் கட்டாயமாக ஸ்கேன் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதே நேரத்தில், டிக்கெட் மையத்தை மீண்டும் நடைபாதை அருகே அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tirupati temple Darshan Ticket 


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->