திருப்பதியில் டிசம்பர் மாத அங்கப்பிரதட்சண டோக்கன் நாளை ஆன்லைனில் வெளியீடு.!
Tirupati December month Angapradatsana Token will be released tomorrow
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாத அங்கப்பிரதட்சண டோக்கன்கள் நாளை வெளியிடப்படுகிறது.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில், இந்தியாவில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய அங்கப்பிரதட்சண டோக்கன் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
இதனை பக்தர்கள் ஆன்லைனில் அங்கப்பிரதட்சண டோக்கன் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
English Summary
Tirupati December month Angapradatsana Token will be released tomorrow