ஹெட்போனால் ஏற்பட்ட தகராறு.! தொழிலாளியை அடித்துக்கொன்ற வாலிபர்.!
The youth who beat and Murder the worker in Karnataka
கர்நாடக மாநிலத்தில் ஹெட்போனால் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அடித்து கொன்ற வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி கார்த்திக் (27). இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூரு பாலாஜி லே-அவுட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடத்தில் கார்த்திக், அவரது நண்பர்கள் 3 பேருடன் வேலை பார்த்து வந்தார். இவர்கள் நான்கு பேரும் கட்டிடத்தின் அருகிலே சிறிய குடிசை அமைத்து தங்கி இருந்தனர்.
இந்நிலையில் வழக்கம்போல் இரவு 4 பேரும் தூங்க சென்றபோது, ரஜனிஷ் என்பவரின் ஹெட்போனை கார்த்திக் பயன்படுத்தியுள்ளார். இதையடுத்து ரஜனிஷ் கார்த்திகிடம் ஹெட் போன் கேட்டபோது, கார்த்திக் தர மறுத்துள்ளார்.
இதனால் இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ரஜினிஷ் கார்த்திகை கண்முடித்தனமாக தாக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து இவர்கள் படுத்து தூங்கியுள்ளனர்.
இந்நிலையில் காலையில் நீண்ட நேரமாகியும் கார்த்திக் எழுந்திருக்கவில்லை என்பதால், அவரைப் பார்த்தபோது உயிரிழந்து கிடந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஹெட்போன் பயன்படுத்தியதால் ஏற்பட்ட தகராறில் ரஜனிஷ் கார்த்திகை தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தலைமறைவான ரஜினிஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
The youth who beat and Murder the worker in Karnataka