சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - தொழிலாளிக்கு 50 ஆண்டுகள் ஜெயில்.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கேரளா மாநிலம் கோட்டையம் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி சாபு. இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து முண்டகாயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சாபுவை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு சங்கனாச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சாபுக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 75 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்றும், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The worker who sexually harassed the girl was jailed for 50 years in kerala


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->