குளிரில் நடுங்கும் தலைநகர்.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..! - Seithipunal
Seithipunal


இதுவரை இல்லாத அளவு டெல்லியில் கடும் குளிர் வாட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுள்ளது.

குளிர்காலம் ஆரம்பித்ததில் இருந்து தலை நகர் டெல்லியில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பநிலை 6 புள்ளி 1 டிகிரி செல்சியசாக சரிந்தது.  இதன் காரணமாக கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது.

பனிமூட்டத்தால் வாகன ஓட்டுகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.  மேலும், புறநகர் ரயில்கள் தாமதமானது.  கடும் குளிர் காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

மேலும்,சிலர் சாலைகளில் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர். டெல்லியில் மட்டுமின்றி அதன் அண்டை மாநிலங்களிலும் குளிர் வாட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The normal life of the people is affected due to the severe cold in Delhi


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->