தாசில்தாரை எரித்து கொன்ற வழக்கின் குற்றவாளி உயிரிழந்தார்..!
The culprit of the case that killed Tasildar died
தெலுங்கானா மாநிலத்தில் தாசில்தாரை எரித்துக் கொன்ற வழக்கில் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குற்றவாளி உயிரிழந்தான்.
தெலுங்கானாவில் ரங்கா ரெட்டி மாவட்டம், அப்துள்ளப்பூர்மெட் தாசில்தார் விஜயா, தனக்கு சொந்தமான பிரச்சனைக்குரிய 7 ஏக்கர் நிலத்திற்கு பட்டா வழங்காமால் இருந்த காரணத்தால், அதை கண்டித்து கவுரெலி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் தாசில்தார் அலுவலகம் சென்று இது குறித்து கேட்டுள்ளார்.
இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சுரேஷ் பெட்ரோல் தாசில்தார் விஜயா கொலை செய்தார். இந்த வீடியோ பதிவு வைரலாக பரவியது. இதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து பெரிதும் பேச பட்டது.
இந்த சம்பவத்தில், தாசில்தாரை காப்பாற்ற முயற்சி செய்த டிரைவர் குருநாதா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 60 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்த குற்றவாளி சுரேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.
English Summary
The culprit of the case that killed Tasildar died