'ஏஐ' மற்றும் 'டீப் பேக்' மூலம் அவதூறு பதிவுகளை அகற்ற 2 மணி நேரம் மட்டுமே கெடு; சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ள மத்திய அரசு..!
The central government has set a deadline of only 2 hours to remove defamatory posts on social media
தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-இல் செய்யப்பட்ட புதிய திருத்தத்தின்படி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் ‘டீப் பேக்’ மூலம் போலி பதிவுகளைத் தடுக்க, அதாவது, பாலியல் மற்றும் ஆபாச பதிவுகளை அகற்ற சமூக ஊடகங்களுக்கு இருந்த காலக்கெடுவை 24 மணி நேரத்திலிருந்து 02 மணி நேரமாகக் குறைத்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசு அல்லது நீதிமன்ற உத்தரவுப்படி சட்டவிரோத மற்றும் சர்ச்சைக்குரிய பதிவுகளை அகற்ற இருந்த காலக்கெடு 36 மணி நேரத்தில் இருந்து 03 மணி நேரமாகவும், பயனர்களின் புகார்களைத் தீர்க்கும் அவகாசம் 72 மணி நேரத்தில் இருந்து 36 மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆபாசம் மற்றும் ஆள்மாறாட்டம் போன்ற உணர்வுபூர்வமான விவகாரங்கள் தொடர்பான புகார்கள் மீது 02 மணி நேரத்திற்குள்ளாக நடவடிக்கை எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளைப் பின்பற்றத் தவறினால், தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் பிரிவு 79-இன் கீழ் மூன்றாம் தரப்பு பதிவுகளுக்கு வழங்கப்படும் சட்டப் பாதுகாப்பு விலக்கைக் குறிப்பிட்ட தளங்கள் இழக்க நேரிடும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
The central government has set a deadline of only 2 hours to remove defamatory posts on social media