ரூ.1000 கொடுக்க முடியாததால் கர்ப்பிணி பெண்ணை நடுரோட்டில் விட்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.!
The ambulance driver left the pregnant woman in the middle of the road because she could not pay 1000 in uttarpradesh
ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் சாலையில் விடப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் பரிதாபகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூரில் உள்ள பண்டாரி கிராமத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் கர்ப்பிணிப் பெண்ணையும், அவரது உறவினர்களையும் ரூ.1000 கொடுக்க முடியாததால் நடுரோட்டில் விட்டுச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த வீடியோவில் கர்ப்பிணி பெண் சாலையின் ஓரத்தில், வலியால் துடித்தபடி அமர்ந்திருக்கிறார். 1000 ரூபாய் இருந்தால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மருத்துவமனையில் இறக்கி விட்டிருப்பார். ஆனால் பணம் கொடுக்க முடியாததால் நடுரோட்டில் இறக்கிவிட்டார் என்று உறவினர் ஒருவர் வீடியோவில் கூறுகிறார்.
English Summary
The ambulance driver left the pregnant woman in the middle of the road because she could not pay 1000 in uttarpradesh