பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம்.. தீவிரவாதிகள் ஊடுருவல்.? 5 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அதன்படி, தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் ஜூனைத், சோஹில், உமர், முடசர், ஜஹித் ஆகிய 5 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெங்களூருவில் இன்று கைது செய்துள்ளனர். 

இதில் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து வெடிபொருட்கள் செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட அனைவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை வழக்கில் பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அங்கு அவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்பட்டு, வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என பயங்கரவாத அமைப்பு பயிற்சி வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

பெங்களூருவில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் அந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrorist attack plan in Bangalore 5 terrorist arrested


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->