ஜம்மு காஷ்மீர் எல்லையில் பெரும் பதற்றம்! கூட்டமாக பரந்த பாகிஸ்தான் டிரோன்கள் - உஷார் நிலையில் இந்திய ராணுவம்! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் எல்ஓசி அருகே மீண்டும் பாகிஸ்தானிய டிரோன்களின் நடமாட்டம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு ரஜோரி மாவட்டத்தின் சுந்தர்பானி, கனுயன், பால்ஜரோய் பகுதிகளில் மொத்தம் ஆறு டிரோன்கள் பறந்ததாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானிலிருந்து வந்த இவை, எல்ஓசி அருகே சிறிது நேரம் வட்டமிட்டு பின்னர் மீண்டும் பாகிஸ்தான் திசையில் திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தையடுத்து, இந்திய ராணுவமும் எல்லைப் பாதுகாப்புப் படையும் அதிகரித்த எச்சரிக்கையுடன் எல்லையில் ரோந்து மற்றும் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளன.

கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் இருந்து டிரோன் ஊடுருவல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எல்லை அருகே உள்ள இந்திய ராணுவ முகாம்கள் மற்றும் தளங்களின் இருப்பிடம் பற்றிய தகவல்களை சேகரிக்க பாகிஸ்தான் இவ்வாறு முயற்சி செய்து வருவதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இதனால் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் மீண்டும் பதட்டமான சூழல் நிலவுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tensions high on Jammu and Kashmir border Pakistani drones in large numbers Indian Army on high alert


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->