மதுவிற்கு பணம் கேட்டதால் கடையை அடித்து உடைத்த இளைஞர்கள்..!
Tasmac bar Attacked in Pondicherry
மதுபானத்திற்கு பணம் கேட்டதால் பாரை அடித்து உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் மதுகடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மதுபான கடையில் இரு இளைஞர்கள் மது அருந்தியுள்ளனர். மது அருந்தி முடித்ததும் பில் தொகையில் பாதி தான் கட்ட முடியும் என தகராற்றில் ஈடுப்பட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியது.
இதனை அடுத்து, அந்த இரண்டு இளைஞர்களும் தங்கள் ஆதரவாளர்களை அழைத்து வந்து கடையின் உரிமையாளரை சரமாரியாக தாக்கினர். மேலும், பாரை அடித்து உடைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Tasmac bar Attacked in Pondicherry