விவசாயிகள் நிலை என்ன? சிபில் ஸ்கோர் பயிர் கடன் குறித்து தமிழ்நாடு அரசு கொடுத்த விளக்கம்...!
status of farmers Explanation given by TN government regarding CIBIL score crop loans
சமீபத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், 'தமிழக அரசின் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் வங்கிகளில் 'சிபில் ஸ்கோர்' அடிப்படையில் பயிர் கடன் வழங்க வேண்டும்' என சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார்.

இந்த திடீர் நடவடிக்கை ஏழை விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது விவசாயிகளுக்கு 'சிபில் ஸ்கோர்' அடிப்படையில் கடன் என்ற அறிவிப்பு கடுமையான நெருக்கடியை உருவாக்கும்.
இந்த திட்டத்தை உடனடியாக திரும்ப பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் 'செல்வப்பெருந்தகை' உள்ளிட்டோர் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு, கூட்டுறவு வங்கியில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அறிவுறுத்தப்படவில்லை என விளக்கமளித்துள்ளது.
இதில் கடன் தொகை நிலுவை இல்லை என்பதை உறுதி செய்ய மட்டுமே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
status of farmers Explanation given by TN government regarding CIBIL score crop loans