வட மாநிலங்களில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரச்சாரம்.!
stalin election campaighn in north states
இந்தியாவில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் 40 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்திருந்தார். அவரது பேச்சுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
ஒவ்வொரு பிரச்சாரத்திலும், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையையும் கடுமையாக சாடினார்.
பொதுக் கூட்டங்களில் பேசியது மட்டுமின்றி காலையில் நடைபயிற்சிக்கு சென்றபோதும் மக்களை சந்தித்து வாக்கு கேட்டார். தற்போது தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து தேர்தல் முடிந்து விட்ட நிலையில் வட மாநிலங்களில் இன்னும் ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டணி கட்சியினர் மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது வடமாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.
English Summary
stalin election campaighn in north states